Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தலைகவசம்,சி.சி.டி.வி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆகஸ்டு 14, 2019 06:18

தாம்பரம்: தாம்பரம் அருகே தலைகவசம் மற்றும் சி.சி.டி.வி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இணை ஆணையர் மகேஸ்வரி கலந்து கொண்டார்.

சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகே சென்னை பெருநகர காவல் தெற்க்கு மண்டலம் புனித தோமையார் மலை மாவட்டம் சேலையூர் காவல் நிலையம் சார்பில் தலைகவசம் அணிவது குறித்தும் மற்றும் சி.சி.டி.வி கேமராக்கள் அமைப்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் காவல்  இணை ஆணையர் மகேஸ்வரி ,துணை ஆணையர் புனித தோமையார் மலை மாவட்டம் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் 50க்கும் மேற்பட்டோர் தலைகவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிளுக்கு தலை கவசம் அணிவது  குறித்து முக்கியதுவத்தை எடுத்துரைத்தும் அதற்கான துண்டு பிரசூரங்களும், செடிகளும் வழங்கபட்டு சி.சி.டி.வி கேமராக்கள்  அமைப்பது குறித்து முக்கியதுவத்தையும் விளக்கினர்.

பின்னர் ஊடங்களுக்கு பேட்டியளித்த துணை ஆணையர் பிரபாகர் இதுவரை தோமையார் மாவட்டத்தில் 14,500 கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளது மேலும் சி.சி.டி வி கேமராக்கள் அமைப்பதற்காக இந்த இரண்டாவது கட்ட சி.சி.டி.வி விழிப்புணர்வு நிகழச்சி நடத்தப்பட்டது. 

எங்கெல்லாம் சி.சி.டி.வி கேமராக்கள் பொறுத்தபடாமல் விடுபட்டிருக்கிறதோ அங்கு அமைப்பதற்க்காக பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

தலைப்புச்செய்திகள்